இங்கிலாந்தை சேர்ந்த 39 வயதான அலெக்சிஸ் பகுதிநேர உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 15 ஆண்டு பிறகு பின்னர் பெண் பிள்ளை ஒன்று தற்போது பிறந்துள்ளது. தமது 22 ஆம் வயதில் அலெக்சிஸ் முதன் முறையாக ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார்.
இரண்டாவதும் மூன்றாவதும் ஆண் பிள்ளைகள் பிறந்த நிலையில் தங்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என இந்த தம்பதி ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து 10 ஆண் பிள்ளைகள் பிறந்த பின்னரும் டேவிட் மற்றும் அலெக்சிஸ் தம்பதிகளின் பெண் பிள்ளைக்கான ஆசை மட்டும் குறையவே இல்லை. இறுதியில் 11-வது முறையாக பிறந்த பிள்ளை பெண் குழந்தையாக பிறந்துள்ளது.
இந்தக் குழந்தை குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அலெக்ஸிஸ் இந்த கர்ப்பம் திட்டமிடப்படாதது எனவும் மேலும் இத்துடன் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவடையும் எனவும் கூறியுள்ளார்.














