ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை 9 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. விசாரணை முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் 6 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ அனுமதி கேட்டது.
ஆனால், ‘400க்கு மேல் கேள்வி கேட்டு பதில் சொல்லிவிட்டேன். எனக்கு எதிராக எந்த ஆவணமும் இல்லை’ என்று சிதம்பரம் தெரிவித்தார்.
முடிவில் வரும் செப்.2 வரை காவல் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் அவரது ஆதரவாளர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.














