தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற மில்லர் என்பவரது மகன் சுதாகர் (22) இவர் அப்பகுதியில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் சாலை ஓரத்தில் தனது பைக் அருகே முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சுதாகர் விபத்தில் இறந்தாரா..?அல்லது வேறு ஏதும் காரணமா..? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.