எட்டயபுரம் அருகே முத்தலாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் விற்பனை முடிந்த பின்னர் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று (ஆகஸ்ட் 5) கடையை திறக்க வந்தபோது கடையின் பின்பக்க சுவரில் உடைக்கப்பட்டு அங்கிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்கள் திருடப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.








