சென்னையில் கர்ப்பிணி சாவு – உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை

0
690

சென்னை தேனாம்பேட்டை திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். 9 மாத கர்ப்பமாக இருந்த இவரது மனைவி பிரதீபாவுக்கு நேற்று காலை பிரசவ வலி திடிரென எடுக்க, அவரை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு எதிரே இருக்கும் தனியார் மகப்பேறு மருத்துவமனையில்(ஜெனிசிஸ் மருத்துவமனை) பிரசவத்திற்காக நேற்று காலை 11 மணியளவில் அவரது உறுப்பினர்கள் சேர்த்தனர்.

ஏற்கெனவே பிரதீபாவுக்கு 5 வயது ஒரு மகள் இருக்கும் நிலையில் முந்தைய பிரசவம் சுகப்பிரசமாக நடைபெற்று இருந்ததால், தற்போதைய பிரசவமும் சுகப்பிரசவமாக நடக்க மருத்துவர்கள் முயற்சி செய்தி வந்தனர். ஆனால் திடீரென பிரதீபாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி கணவர் உட்பட யாரிடமும் தெரிவிக்காமல் பிரதீபாவுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பாக வழக்கமாக உறவினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையையும் மருத்துவமனை நிர்வாகம் பின்பற்றவில்லை எனக்கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது இரத்தம் அதிகமாக வெளியேறியதில் பிரதீபாவின் உடல்நிலை மோசமானதாகவும், அது குறித்து எந்த தகவலையும் உறவினர்களுக்கு மருத்துவமனை தெரிவிக்காமல் பிரதீபாவின் கர்ப்பைப்பையையும் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பிரதீபா குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பிறந்த குழந்தையை மட்டும் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சையளிக்க வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு இரவு 8 மணியளவில் பிரதீபா அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்து விட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கான அனுமதியை உறவினர்களிடம் பெற மறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு கூடிய பிரதீபாவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம், அனுபவம் இல்லாத மருத்துவரை கொண்டு அறுவை சிகிச்சை செய்து பிரதீபா கொலை செய்து விட்டதாக கூறி மருத்துவமனை முன்பாக முற்றுகையிட்டனர். தனது மனைவியின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் அவரின் கணவர் குற்றம் சாட்டினார்.

அங்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் உயிரிழந்த பிரதீபாவின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் குறித்து முறையாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பிரதீபாவின் உடல் உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாளை உடற்கூறாய்வு நடைபெற இருக்கிறது.

பிரதீபா மரணத்தினால் அவரது 5 வயது பெண் குழந்தையும், நேற்று பிறந்த பச்சிளங்குழந்தையான பெண் குழந்தையும் ஆதரவின்றி தவித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here