பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இன்று உலகில் பொருளாதார வளம் உடைய ஏழு நாடுகளின் (ஜி-7) கூட்டமைப்பு கூட்டம் பிரிட்டன் நிதி அமைச்சர் சுநாக் தலைமையில் நடைபெற்றது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து பேசினார்கள். கொரோனா பிரச்சினையால் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிதிக் கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. எனவே, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 15 சதவீதம் வரி விதிப்பது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.












