தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாளுக்கு (22) திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இவரது மனைவிக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டது.
அதுமுதல் மனவேதனையில் இருந்து வந்த பெருமாள், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விமலா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






