உ.பி.யில் காந்தி சிலை உடைப்பு

0
1309

உத்தர பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்தி இண்டர் காலேஜில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சிலையின் உடைந்த தலைப்பகுதி சரிசெய்யப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here