இந்தியாவின் செல்லப்பிள்ளைகள் அதானி, அம்பானி குடும்பத்தினர். இதில் அம்பானி குடும்ப செய்தி ஒன்று அரங்குக்கு வராமலே அமுங்கி போனது.
வெளிநாட்டு வங்கி கணக்கை ஆராய்ந்தபோது முகேஷ் குடும்பத்தார் கணக்கில் காட்டாத பணம் பற்றிய தகவல் தெரியவந்தது.
இதையடுத்து மும்பை வருமான வரி பிரிவிலிருந் முகேஷ் அம்பானி மனைவி நித்தா மற்றும் 3 பிள்ளைகளூக்கு கறுப்பு பண தடுப்பு சட்டம் 10ஆவது பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது, கடந்த 2011-ஆம் ஆண்டு எச்எஸ்பிசி ஜெனிவாவில் கணக்கு வைத்திருந்த 700 இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த விவரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.விசாரணையும் நடந்ததாக கூறப்படுகிறது.
எதிர்கட்சிக்காரர்கள் அகப்பட்டால் அதிகாரிகளை கொண்டு மிரட்டியும், மீடியாக்களில் வெளிப்படுத்தியும் வெற்றி கொண்டாடும் மத்திய ஆட்சியாளர்கள் முகேஷ் அம்பானி குடும்ப விவகாரத்தில் மௌனம் காத்தது பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.















