திருநெல்வேலி ரெட்டியார் பட்டியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன் ( 30 ).இவர் நெல்லையில் டிராக்டர் மெக்கானிக்காக தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கன்னியாகுமரிக்கு டிராக்டர் ரிப்பேர் செய்வதற்காக ஒருவர் அழைத்ததன் பேரில் சென்றுள்ளார்.

பைக்கில் அவர் சென்றபோது எதிரே வந்த கார் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்








