கேடிசி நகர் திருநெல்வேலி பகுதியில் இரவு நேரங்களில் அலையும் சைக்கோ திருடனால் பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
சுமார் 6 அடி உயரம் கொண்ட ஆஜானுபாகுவான இந்த சைக்கோ திருடன், வீட்டு காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து பெண்கள் அணியும் உள்ளாடைகளை திருடி செல்கிறான்.
பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு குற்ற செயலில் ஈடுபடவும் முயற்சித்துள்ளான். எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும் முன் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









