பேய்க்குளத்தில் அடித்து கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது.
கடந்த இரு தினங்களாக ஒரு நாயை 3 பேர் அடித்துக் கொல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடத்த மாவட்ட காவல்துறை உத்தரவிட்டது. இதன் பேரில் பேய்க்குளம் அரசு கால்நடை மருத்துவர் சுரேஷ் தலைமையில் ஒரு மணி நேரம் நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது.பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது









