தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் நடைபெற்ற முன்னோடி மனு நீதி நாள் முகாமில் திருச்செந்தூர் சமுக நலத்திட்ட தாசில்தாரிடம ஆம் ஆத்மிி கட்சி மாாவட்டநிர்வாகி குணசீலன்,மத்துவ மக்கள் கட்சி நிர்வாகி சோடா ரவி மதிமுக மாணவரணி நசீர் , தமிழக மாணவர் இயக்க மணிவண்ணன் ஆகியோர் அளித்த மனுவில்்’ தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச கரம்பை மண் அள்ள அரசு கொடுத்துள்ள அனுமதி அரசாணையை தவறாக பயன்படுத்தி ,உடன்குடி அனல்மின் நிலைய பணிகளுக்கு வணிக ரீதியில் மண் விற்பனை நடககிறது.
மண் கொள்ளைக்கு வசதியாக திருச்செந்தூர் வட்ட குளங்களுக்கு தாமிரபரணி பாசன தண்ணீர் திறந்து விடாமல் இருக்கிறார்கள். இதனால் விவசாயம் , குடிநீர் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ள்னர்.