காவல்கிணறு அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கணவர் கைது

0
1308

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி, லாரி டிரைவர். இவருக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் . இந்நிலையில் சுடலையாண்டி லாரி ஓட்டுநராக பணிபுரிவதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக சுடலையாண்டி சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த ஜெயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஜெயலட்சுமியை அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் ஜெய லட்சுமி சம்பவ இடத்தில மயங்கினார். மேலும் ஆத்திரம் தீராமல் தேங்காய் துருவியை எடுத்து ஜெயலட்சுமி மண்டையில் பலமாக சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும் சுடலையாண்டி தப்பி ஓடினார். பின்னர் பழவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பழவூர் போலிசார் சுடலையாண்டியை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் ஏ.எஸ்.பி சமய் சிங் மீனா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஜெயலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here