தெருவில் நாய் ஒன்று செத்துக் கிடந்தாலே உடனடியாக அப்புறப்படுத்துவார்கள். ஆனால் இந்த கொரானா காலகட்டத்தில் மனிதர்களுடைய உடல்கள் மீது மிகுந்த அலட்சியம் காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் உள்ள அரசு நியாயவிலைக் கடை முன்பு சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் உயிரிழந்துள்ளார்.
அவர் இறந்து பல மணி நேரமாகியும் அவர் உடலை மீட்க இதுவரையும் எந்த அதிகாரிகளும் முன்வராததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.