இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அதன்பின்னர் ‘எனது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நண்பர்களுடன் பேசினேன். வர்த்தகம் குறித்து பல விடயங்கள் பேசப்பட்டன. காஷ்மீர் பிரச்சினையில் பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக்கொண்டேன். பேச்சு பயனுள்ளதாக இருந்தது’ என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டார்.
அதன்பின்பு அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் பிரச்சினையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான்கானிடன் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.













