மது இல்லாத தீபாவளியை கொண்டாட வகைசெய்யவேண்டும் என தமிழக முதல்வருக்கு பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், தீபாவளிப் பரிசாகவும், எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலாகவும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவிட வேண்டும். மதுவற்ற தீபாவளியை தமிழர்கள் கொண்டாடும் வகையில் தமிழக அரசு இந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்.