சீன அதிபர் ஜி ஜின் பிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் போராடலாம் என கருதி கடந்த ஒரு வாரமாக சென்னையை சுற்றி வசித்த திபெத்திய இளைஞர்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும், இன்று காலை பிரதமர் மோடி வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிண்டியில் சீன அதிபர் தங்குவதற்கான ஓட்டலுக்கு முன்பு வந்த 3 பெண்கள் அடங்கிய 3 பேர் கொண்ட திபெத்தியர் குழு சீன அதிபர் வருகையை எதிர்த்து கோஷமிட்டது.
உடனடியாக போலீசார் அவர்களை அமுக்கிப்பிடித்து காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.












