மதுரை – தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.