அயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை: உச்ச நீதிமன்றம்

0
1239

அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 28-வது நாளாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற அலுவல்கள் முடியும் 4 மணிக்கு பதிலாக கூடுதலாக ஒருமணி நேரம் அதாவது 5 மணி நேரம் இந்த வழக்கு விசாரணையை தொடர முடிவு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினர்களிடமும் நீதிபதிகள் தெரிவித்தனர். அயோத்தி வழக்கில் நவம்பர் மாத நடுவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here