தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையில் தே.மு.தி.க. நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொண்டர்கள் அழைத்ததின் பேரில் விஜயகாந்த்தின் மகனாக வந்துள்ளேன்.
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைதேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி தொடரும் என்று பொருளாளரே அறிவித்துள்ளார். அதன்படி அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி தொடரும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.