நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சி

0
1292

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1ஆம்தேதி முதல் அத்திவரதர் சயன நிலையில் (படுக்கை கோலத்தில்) பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 30ஆவது நாளான நேற்று அத்திவரதர் முத்து கிரீடம், மலர் கிரீடம், ராமர் வண்ண பட்டாடையுடன் காட்சியளித்தார்.
3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரை தரிசித்தனர். தரிசன வரிசை நெரிசலில் சிக்கி 25 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொது தரிசன வரிசையில் 9 மணி நேரமும் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் 5 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதுவரை சயன கோலத்தில் (படுத்த நிலையில்) அருள்பாலித்து வரும் அத்திவரதர் நாளை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தரிசன நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 5 மணிக்கு அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here