சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி இன்று காலை கைது செய்யப்பட்டார்.
ஜனதா காங்கிரஸ் கட்சி தலைவரான இவர் கடந்த 2013 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமீரா, அஜித் ஜோகி பிறந்த இடமும், பழங்குடியினர் என்ற விவரமும் தவறு எனக்கூறி வழக்கு தொடர்ந்தார்.
அதையடுத்து நடந்த விசாரணைக்கு பின்னும் அமித் ஜோகி கைது செய்யப்படவில்லை. எனவே, பிலாஸ்பூர் எஸ்பி அலுவலகம் முன்பு சமீரா தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையில் ஈடுபட்டார். இதையடுத்து அமித் ஜோகி கைதுசெய்யப்பட்டார்.