கோவை மரக்கடையில் தீ 7லட்ச ரூபாய் பொருள் நாசம்

0
372

கோவை காந்தி பார்க்கில் இருந்து சொக்கம்புதூர் செல்லும் சாலையில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான நிலை ,ஜன்னல் மற்றும் கட்டில்கள் பர்னிச்சர்கள் செய்யப்பட்டு வந்தது. இதற்காக ஏராளமான மரப்பலகைகள் ,கட்டைகள் ஆகியவை அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன .

இந்நிலையில் இன்று காலை 3:30 மணி அளவில் கடையிலிருந்து லேசாக புகை வருவதை அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் மளமளவென பற்றி எரிந்த தீயை அணைக்க தொடங்கினர். அதற்குள் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரச்சாமான்கள் மற்றும் மர கட்டைகள் ஆகியவை எரிந்து நாசமானதுு.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here